logo
புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு பிரிவால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நாளை ஏலம் விடப்படுவதாக அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு பிரிவால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நாளை ஏலம் விடப்படுவதாக அறிவிப்பு

07/Dec/2020 09:17:31

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையின் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நாளை (டிசம்பர் 8)  மாவட்ட ஆயுதப்படை திடலில் ஏலம் விடப்படுகின்றன.

இது குறித்து  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன் வெளியிட்ட தகவல்:  மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையின் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்கான வைப்புத் தொகை இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 10 ஆயிரம், சரக்குமற்றும் சேவை வரியுடன் சேர்த்து கட்ட வேண்டும்.

வாகனங்கனை (டிச.7 இன்று  பார்வையிடலாம். தொடர்ந்து 8 -ஆம் தேதி காலை 8 மணி முதல் 9 மணிக்குள் ஏலத்தில் பங்கேற்பதற்கான டோக்கனை பெற்றுக் கொள்ள வேண்டும்.ஏலத்தில் பங்கேற்போர் சொரோனா தடுப்புக்கான முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்

Top