logo
உபி மாநில பாஜக அரசை கண்டித்து ஈரோட்டில் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உபி மாநில பாஜக அரசை கண்டித்து ஈரோட்டில் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

10/Oct/2020 06:28:30

உபி மாநிலத்தில் நடந்த பாலியல் வன்முறை கொலை சம்பவத்தையும், அம்மாநில பாஜக அரசை கண்டித்து ஈரோட்டில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் இன்று(அக்.10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் நூர் சேட் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முகமது ஆரிப் முன்னிலை வகித்தார். 

கோரிக்கைகள்: உத்திரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை தண்டிக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும். உபி மாநிலத்தில் பாலியல் வன்முறை சம்பவத்தால் கொலையான பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை தரக்குறைவாக நடத்திய அம்மாநில பாஜ அரசை கண்டித்தும், உபி மாநில போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கோ முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில், திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணி, கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன், காங்கிரஸ் மாநகரத் தலைவர் ஈ.பி. ரவி, திராவிட கழக மண்டல செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


Top