logo
அறந்தாங்கியில் திருச்சி மண்டல காவல்துறை துணை தலைவர் ஆய்வு

அறந்தாங்கியில் திருச்சி மண்டல காவல்துறை துணை தலைவர் ஆய்வு

10/Oct/2020 06:14:54

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு காவல் உள்கோட்டங்களில் திருச்சி மண்டல காவல்துறை துணைத்தலைவர் ஆனி விஜயா நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இயங்கும் காவல் உதவி மையத்தை   இன்று ஆய்வு செய்தார்.

அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவின் இயக்கத்தை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, அறந்தாங்கி காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தையும், காவல்நிலையத்தையும்  ஆய்வு செய்தார். இதையடுத்து, காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் முகாமில் கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டார். காவலர் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட திருச்சி மண்டல காவல்துறை துணை தலைவர் ஆனி விஜயா அங்கு மரக்கன்றுகளை நட்டார். 

ஆய்வின்போது,  புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன், டிஎஸ்பி ஜெயசீலன், அறந்தாங்கி காவல் ஆய்வாளர்  ரவீந்திரன், மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கோமளவள்ளி ஆவுடையார்கோயில்  காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணியன், உதவி ஆய்வாளர்கள் அறந்தாங்கி சிவக்குமார், இளமாறன், சாந்தி, ரேஸ்மா, நாகுடி ராசேந்திரன் ஏம்பல் துரையரசன் ஆகியோர் உடனிருந்தனர். இதில், அறந்தாங்கி ரோட்டரி முன்னாள் தலைவர் தங்கத்துரை,ரோட்டரி நிர்வாகிகள் சரவணன் பன்னீர்செல்வம் செந்தில்வேலன்,சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Top