12/Dec/2020 10:49:11
சென்னை: தென்பெண்ணை ஆறு - தூள்செட்டி ஏரி கிளை வாய்க்காலை விரைந்து அமைக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி, மாரண்டள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவிடாமல் கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மாநில கொள்கை பரப்பு செயலர் மற்றும் கொமதேக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
கொங்கு ஈஸ்வரன் கைது செய்ததை கண்டித்து கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.