18/May/2021 11:28:37
ஈரோடு, மே: மறைந்த கோபிச்செட்டிபாளையம் புதியதலைமுறை செய்தியாளர் சந்திசேகரின் குடும்பத்துக்கு நிவாரண வழங்கக்கோரி தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமியிடம் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பாக தமிழக வீட்டு வசதிதுறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் அளித்த மனுவில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் புதிய தலைமுறை செய்தியாளராகப் பணியாற்றிவந்த சந்திரசேகர் எதிர்பாரத விதமாக கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவி கிடைக்க மாவட்ட அமைச்சர் சு. முத்துசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரிடம் மனு அளிக்கும் நிகழ்வில் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ். ரமேஷ், துணைத்தலைவர் சுப்பிரமணியன்,
செயலாளர்
எஸ்.பி. ஜீவாதங்கவேல், பொருளாளர் ஆர். ரவிச்சந்திரன் உள்பட
முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மனுவைப்
பெற்றுக்கொண்ட அமைச்சர்
அதை ஈரோடு மாவட்ட ஆட்சியர் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சங்க நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.