logo
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது:

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது:

11/Oct/2022 06:35:11

   சிதம்பரம் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவ, மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மாணவணை பண்ரூட்டி சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளார்.

   சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு கல்லூரி மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகியது. இதைத்தொடர்ந்து சிதம்பரம் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவ மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இவர்கள் 2 பேரிடமும் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முகுந்தன் மற்றும் ரம்யா ஆகியோர் விசாரணை நடத்தினர். அதோடு 2 பேருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

  விசாரணையில் அந்த மாணவி சிதம்பரம் அருகே வெங்காயத்தலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர், அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது.

தாலி கட்டிய மாணவன் சிதம்பரம் வடகிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், கீரப்பாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. விசாரணை முடிந்ததும் மாணவி கடலூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் பாலிடெக்கனிக் மாணவனிடம் 2-வது நாளாக 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், மாணவணை குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து மாணவனை பண்ரூட்டி சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Top