logo
அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக  அரசு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பா..?

அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக அரசு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பா..?

15/Apr/2021 09:13:23

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மற்றும் ஹிமாச்சல் பிரதேச மாநிலங்களில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இச்சூழலில், தமிழகத்தில் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைப்பது தொடர் பாக இன்று முக்கிய ஆலோசனை

 தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்கப்படுவது குறித்து தமிழக அரசு   இன்று(ஏப்.15) முக்கிய  முடிவெடுக்கவுள்ளது.  தலைமைச் செயலாளர் தலைமையில் சுகாதாரத் துறை, உள் துறை வருவாய் துறை உள்ளிட்ட துறை செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் +2 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Top