logo
உத்தரபிரதேச பாலியல் வன்கொடுமையைக்கண்டித்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உத்தரபிரதேச பாலியல் வன்கொடுமையைக்கண்டித்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

05/Oct/2020 06:17:24

புதுக்கோட்டை: அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பாக உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் ஆளுகின்ற பாஜக அரசை கண்டித்தும் ஆட்சியர்  அலுவலகம் அருகில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 புதுக்கோட்டையில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் உத்தரப் பிரதேசத்தில் மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை  கண்டிடும் உத்தர பிரதேசத்தில் ஆளுகின்ற பாரதிய ஜனதா  கட்சியை கண்டித்தும்  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மனிஷா குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் தலித் இன பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

 மனிஷாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட  கொலையாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் தங்கவேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜ் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

 

                                  

Top