logo
மதுரை அண்ணாநகரில் கிடங்கில் ரூ. 21லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு: ஊழியர் கைது

மதுரை அண்ணாநகரில் கிடங்கில் ரூ. 21லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு: ஊழியர் கைது

25/Dec/2020 12:10:11

மதுரை டிச: அண்ணாநகரில் செல்போன் குடோனில் வைத்திருந்த 21லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடிச் சென்ற ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை அண்ணா நகர் 80 அடி சாலையில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் தனியார் நிறுவனகிடங்கு உள்ளது .இங்கு எக்சேஞ்ச் செய்வதற்காக ரூ. 21 லட்சத்து 11 ஆயிரத்து 450  மதிப்புள்ள 35 விலை உயர்ந்த செல்போன்கள் இருப்பில் வைக்கப்பட்டிருந்ததாம்..

சம்பவத்தன்று இங்கு ஆடிட் செய்தபோது செல்போன் பெட்டிகளில் போனுக்கு பதிலாக பேட்டரி மட்டும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை சிசிடிவியில் பார்த்தபோது அந்த கடையில் வேலை பார்த்த ஊழியர் மனோஜ் என்பவர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை தேடியபோது அவர் தலைமறைவாகிவிட்டார் .இதனுடைய மதிப்பு 21 லட்சத்து 11 ஆயிரத்து 480 ஆகும். இந்த திருட்டு தொடர்பாக அந்த நிறுவனத்தின் கிளை மேலாளர் ராஜ்குமார் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை  தீவிர விசாரணையில் ஈடுபட்டு பல்வேறு கடைகளிலும் தனி நபர்களிடமும் விற்கப்பட்ட ரூ. 20 லட்சத்து 20 ஆயிரத்து 30 மதிப்புள்ள செல்போன்களை  பறிமுதல் செய்தனர். இந்த திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த  ஊழியர் மனோஜ் மதுரைக்கு வந்த கவலறிந்த போலீஸார் அவரை  கைது செய்து விசாரிக்கின்றனர். 


Top