logo
கோபிச்செட்டிபாளையம் அருகே வாகன விபத்து:விவசாயக்கூலிபெண் தொழிலாளி பலி- 12 பேர் படுகாயம்

கோபிச்செட்டிபாளையம் அருகே வாகன விபத்து:விவசாயக்கூலிபெண் தொழிலாளி பலி- 12 பேர் படுகாயம்

05/Oct/2020 12:00:46

ஈரோடு: ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சின்னகொரவம்பாளையம் ஓட்டைகிணறு அருகில் விவசாயக் கூலியாட்களை பணிக்கு அழைத்துசென்ற மினி சரக்கு வாகனம் சாலையின் அருகில் உள்ள பக்கவாட்டு சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் மினிசரக்கு வாகனத்தில் பயணம் செய்த 13 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

இதில், வெள்ளைப்பாறைமேடு பகுதியைச்சோ்ந்த ஜெயமணி என்ற பெண் தொழிலாளி உயிரிழந்தார். காயமடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மூன்று பெண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சிறுவலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.


Top