logo
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 167 பேருக்கு தொற்று: கொரோனா பாதிப்பிலிருந்து 94 ஆயிரத்து 86 பேர் மீண்டனர்

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 167 பேருக்கு தொற்று: கொரோனா பாதிப்பிலிருந்து 94 ஆயிரத்து 86 பேர் மீண்டனர்

18/Aug/2021 11:55:52

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில் மேலும் 167 பேருக்கு தொற்று: கொரோனா பாதிப்பிலிருந்து 94 ஆயிரத்து 86 பேர் குணமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தினசரி பாதிப்பு ஒருநாள் கூடுவதும் ஒருநாள் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதித்தவர்கள் மொத்தம் எண்ணிக்கை 96 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 144 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 94 ஆயிரத்து 86 ஆக உயர்ந்தது. இதுவரை 642 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்து 864 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து குணமடைந்தவர்கள் எணிக்கையைவிட தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதிய கட்டுப்பாடுகள் மாவட்டத்தில் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

Top