04/Oct/2020 07:46:33
ஈரோடு ,திருப்பூர் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.நீர்பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பொழிவு அதிகமாக இருந்தால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
இன்று காலை 7 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 101.41 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 932 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக நேற்று முதல் மீண்டும் 550 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இன்று மேலும் அதிகரித்து 850 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. என மொத்தம் 3 ஆயிரத்து 150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து காட்டிலும் பாசனத்துக்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.