logo
கலைஞரின்  பிறந்தநாளை முன்னிட்டு    மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  மரக்கன்று  நடும்விழா

கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மரக்கன்று நடும்விழா

03/Jun/2021 08:26:23

ஈரோடு ஜுன்: தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின்  பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி  தொடங்கி வைத்தார்.

 

பின்னர்  அமைச்சர் முத்துசாமி கூறியாதவது:ஈரோடு மாவட்டத்தில் கொரோனோ சிகிச்சைக்கு படுக்கைகள் தட்டுப்பாடு இல்லை. அதே போல் ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்த பல்வேறு தன்னார்வ அமைப்பினர் முன் வந்து செய்து வருகிறது..மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  கூறினார்.

 தி.மு..வினர் உணவு வழங்கல்:

ஈரோடு பெரியார் நகர் பகுதியில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளருக்கு தி.மு.. பகுதி செயலாளர் அக்னி சந்துரு என்கிற சந்திரசேகரன் நல உதவிகளை வழங்கினார் அதைத்தொடர்ந்து கனி மார்க்கெட் பகுதியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் விவேக், முன்னாள் நகர செயலாளர் பொன்னுச்சாமி, சண்முகவடிவு, மாநகர பொருளாளர் சண்முகம், மீனவர் அணி ஆறுமுகம் நாவலன், வட்ட செயலாளர்கள் செந்தில்குமார் திருநாவுக்கரசு, சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், ஈரோடு ஆர்.என்.புதூர் அம்மா உணவகத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஈவிஆர் பா்ஸ்கர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

Top