logo
திருமணமாகாத  விரக்தியில்  தனியார் நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் தனியார் நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

02/Aug/2021 08:53:19

ஈரோடு, ஆக: திருமணமாகாத  விரக்தியில்  தனியார் நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (32).  தனியார் நிதி நிறுவனத்தில் வசூல்  செய்யும் வேலை பார்த்து வந்தார்.  இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் தனது வேலையையும் இழந்தார்.

ஏற்கெனவே திருமணம் ஆகாத  வேதனையில் இருந்த வெங்கடாச்சலம் வேலையும் பறிபோனதால் வாழ்க்கையை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.  இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் உள்ள  தனது அறைக்கு வெங்கடாசலம் தூங்கச் சென்றார் .

மறுநாள் காலையில்  நீண்ட நேரமாகியும்  வெளியே வராததால்,  சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கதவைத் தட்டி எழுப்பியபோதும் கதவு திறக்கவிலையாம். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வெங்கடாசலம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த கிடந்தது தெரியவந்தது.

 இதுகுறித்து, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Top