logo
மதுரையில் 4 பேரை பட்டாக்கத்தியால் வெட்டிய சைக்கோ இளைஞர் கைது

மதுரையில் 4 பேரை பட்டாக்கத்தியால் வெட்டிய சைக்கோ இளைஞர் கைது

04/Oct/2020 05:01:49

மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்நதவர் நாராயணன். மன நோயாளியான இவர் இன்று காலையில் சிக்கந்தர் சாவடி மற்றும் கூடல் நகர் பகுதியில் தேநீர் கடையிலும்,சாலையில் சென்று கொண்டிருந்த 4 பேரையும் அவர்கள் எதிர்பாராத வகையில் பட்டாக்கத்தியால் வெட்டிவிட்டு அருகே இருந்த கருவேலங்காட்டுக்குள் தப்பிச்சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கூடல் நகர் மற்றும் சிக்கந்தர் சாவடி போலீஸார் சைக்கோ இளைஞர் நாராயணனை பிடித்து விசாரித்து வருகின்றனர். ஆளைப் பார்த்தால் எவ்வித சந்தேகமும் கொள்ள முடியாத உருவத்தோற்றம் கொண்ட இந்த இளைஞர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  போலீஸாரால் பிடித்து வைக்கப்பட்ட இளைஞர் நாராயணனை  மன நல மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்த திட்டமிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதே போல, கடந்த பல ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கிராமத்தில் மருதுபாண்டியன் என்ற சைக்கோ நபர் 5 பேரை  கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே போல தற்போது, மதுரையில் நடந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

Top