15/Nov/2020 09:12:56
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மேலராஜ வீதியிலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டியை யை முன்னிட்டு (15.11.2020) சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, தண்டாயுதபாணி சுவாமிக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலையில், தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும் அருள் பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர். ஏற்பாடுகளை பாலு அய்யர் மற்றும் கோயில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்