logo
சத்தியமங்கலம் அருகே 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலி

சத்தியமங்கலம் அருகே 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலி

04/Oct/2020 09:16:34

சத்தியமங்கலம் அருகே சிறுமுகை அடுத்த பெதிகுட்டை பகுதியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் துரை மகன் ராஜன் (46), நவீன்குமார் (46), அரவிந்தன் (45), காரமடை அருகே பிளிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (47) இவர்கள் 4 பேரும் சத்தியமங்லத்திலிருந்து  காரில் சனிக்கிழமை இரவு  சிறுமுகைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பெத்திக்குட்டை அருகே வந்தபோது சிறுமுகையில் இருந்து சத்தியமங்கலம்  சென்ற காரில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சிறுமுகையில் இருந்து சக்தியமங்கலம் சென்ற காரில் கோவை வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் கௌசில், சிறுமுகை பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் பென்ஜில், இதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் தேவன்ந்த் ஆகியோர் இருந்தனர். விபத்தில் சத்தியமங்கலத்திலிருந்து சிறுமுகை நோக்கி காரில் வந்த ராஜன், நவீன்குமார், அரவிந்தன், மோகன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 


Top