logo
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி முன்கள பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி முன்கள பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்

02/Jun/2021 01:22:35

ஈரோடு, ஜூன்: முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி மொடக்குறிச்சி ஒன்றிய திமுக சார்பில்  முன்கள பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு..ஸ்டாலின் அறிவிப்படி, திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச் சருமான கருணாநிதியின் பிறந்தநாள் (ஜூலை3) கொண்டாடப்பட உள்ளது.

கலைஞரின் பிறந்த நாளையொட்டி மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய முன் களப்பணியாளர்கள், பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆப்பரேட்டர்கள் என முன்கள பணியாளர்களுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சருமான சு.முத்துசாமியின் ஏற்பாட்டில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

 

 

 மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர்  சு.குணசேகரன் தலைமையில் மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட 46புதூர், லக்காபுரம், முத்துக்கவுண்டன் பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, குளூர், கஸ்பாபேட்டை, துய்யம் பூந்துறை, கனகபுரம், ஆகிய ஊராட்சிகள் மற்றும் அவல்பூந்துறை பேரூராட்சி, அவல்பூந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் யுவரேகா தனசேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் கலைச்செல்வி முருகன், கிருஷ்ணவேணி பழனிசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகர் மற்றும் அந்தந்த ஊராட்சி, பேரூராட்சிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து  மொடக்குறிச்சி, கணபதிபாளையம், எழுமாத்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மொடக்குறிச்சி பேரூராட்சி, புஞ்சைக் காளமங்களம், கணபதிபாளையம், ஆனந்தம் பாளையம், பழமங்கலம், குலவிளக்கு, எழுமாத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கும்,

அதேபோல் வியாழக்கிழை மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, 60 வேலம்பாளையம், கண்டிக்காட்டு வலசு, பூந்துறை சேமூர், காகம், விளக்கேத்தி ஆகிய ஊராட்சிகள், அரச்சலூர், வடுகபட்டி பேரூராட்சிகள்  மற்றும் அரச்சலூர், ஜெயராமபுரம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள முன் களப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் டேங்க் ஆப்பரேட்டர்கள் என அனைத்து முன் களப் பணியாளர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

Top