logo
ஈரோடு அருகே அந்தியூர்  வனப்பகுதியில் மலைச்சரிவில் தவறி விழுந்த  யானை பலி

ஈரோடு அருகே அந்தியூர் வனப்பகுதியில் மலைச்சரிவில் தவறி விழுந்த யானை பலி

24/Jun/2021 09:57:17

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே வனப்பகுதியில் மலைச்சரிவில் தவறி விழுந்த  யானை பலியானது.

ஈரோடு மாவட்டம் பர்கூர் வனச்சரகத்திற்குட்பட்ட கோவில் நத்தம் வனப்பகுதியில் பர்கூர் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்பொழுது வடபர்கூர் காப்புக்காடு கௌரிமடுவு  என்னும் இடத்தில் மலைச்சரிவில் கால் இடறி கீழே விழுந்து காட்டு யானை ஒன்று தலையில் அடிபட்டு இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

 இதுகுறித்து தகலறிந்த    பர்கூர் வனச்சரக அதிகாரி மணிகண்டனுக்கு உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்வை யிட்டார். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் விஷ்மிஜூ விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்தனர்.

மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் பர்கூர் அரசு கால்நடை உதவி மருத்துவர் சுரேஷ்  யானையின் உடலை சம்பவ இடத்திலேயே உடற்கூராய்வு செய்தார்.  பின்னர் இறந்த யானையை மாமிச உன்னிகளான வன விலங்குகளுக்கு உணவாக விடப்பட்டது

Top