18/Jul/2021 10:16:36
புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை பி எஸ் கே கல்வி அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆதரவுற்றோர்க்கும் ஏழைஎளியோர்க்கும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை கீழ 4-ஆம் வீதி நேரு பள்ளி யில் நடைபெற்ற நிகழ்வுக்கு தாளாளர் பி.கருப்பையா தலைமை வகித்தார். முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் க.நைனாமுகமது முன்னிலை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகி கமலாகருப்பையா பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆதரவுற்றோருக்கும் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.
இதில், பள்ளியின் ஆசிரியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் தனஞ்ஜெயராமச்சந்திரன், ராஜ்குமார்,கனகராஜன் அருணாச்சலம், கல்வியாளர்கள் குமாரசாமி, காசிராஜன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.