logo
கொரோனா நோய்த் தொற்றால் ஈரோட்டில் மேலும் ஒரு நிருபர் பலி

கொரோனா நோய்த் தொற்றால் ஈரோட்டில் மேலும் ஒரு நிருபர் பலி

15/Jul/2021 09:35:33


ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும்  வேந்தர் தொலைக்காட்சியின்  செய்தியாளருமான மா.  ராஜேந்திரன்(53) வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவ மனையில் காலமானார்.

கொரோனா நோய் மற்றும் பிற நோய்த் தொற்றால் உயிரிழந்த வேந்தர் டிவி  செய்தியாளர்  ராஜேந்திரன்  தனது குடும்பத்துடன்  ஈரோடு ரங்கம்பாளையத்தில் வசித்து வந்தார். இவருக்கு மனைவி சித்ரா மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் குருபரன், 6-ஆம் வகுப்பு பயிலும் கௌரவ்  ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இவரது மறைவுக்கு, ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர் நலச்சங்கம், புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் மற்றும் அனைத்து ஊடக செய்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனாவுக்கு பலியான செய்தியாளர் மா. ராஜேந்திரனின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவி வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Top