logo
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து விராலிமலையில் வாகன ஓட்டிகளுக்கு குச்சி மிட்டாய் கொடுத்து காங்கிரஸார் நூதனப் பிரசாரம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து விராலிமலையில் வாகன ஓட்டிகளுக்கு குச்சி மிட்டாய் கொடுத்து காங்கிரஸார் நூதனப் பிரசாரம்

09/Jul/2021 09:57:43

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை ஏற்றத்தை கண்டித்து காங்கிரஸார் சிலிண்டருக்கு மாலை போட்டும், பெட்ரோல் போட வந்த வாகன ஓட்டிகளுக்கு குச்சி மிட்டாயை வாயில் கொடுத்து நூதன பிரசாரத்தில் ஈடுபட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.

விராலிமலை வட்டார காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் பெட்ரோல் நிலையத்திற்கு பெட்ரோல் போட வந்த வாகன ஓட்டிகளுக்கு குச்சி மிட்டாய் கொடுத்தும் அதனை தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கி நூதனப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இதில் பங்கேற்ற காங்கிரஸார், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வட்டாரத் தலைவர் சர்தார் ராஜா, மேலை சி. மதிமாறன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஏழுமலை, சி.அன்பழகன், நகரத் தலைவர் கருப்பசாமி, சட்டையப்பன் உள்ளிட்ட காங்கிரசார் பங்கேற்றனர் 

Top