logo
வீரப்பன்சத்திரம் பகுதியில் நடந்த மனுநீதி  முகாமில் எம்.எல்.ஏ.க்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வீரப்பன்சத்திரம் பகுதியில் நடந்த மனுநீதி முகாமில் எம்.எல்.ஏ.க்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

08/Nov/2020 12:30:20

ஈரோடு: ஈரோடு கிழக்கு- மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மனுநீதி திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

அதில், ஆட்சியர் சி. கதிரவன  தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ் தென்னரசு அகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெறுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

அதன்படி,   ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பன் சத்திரத்தில் 7.11.2020 -இல் ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில் நடைபெற்ற  மனுநீதி முகாமில்,எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே .எஸ்.தென்னரசு ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து 171 மனுக்களை வாங்கினர்.

முகாமில்,   10 பேருக்கு முதியோர் உதவித் தொகையும்,  8 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையும், 53 நபர்களுக்கு இலவச வேட்டி சேலைகள்  என மொத்தம் 74 பயனாளிகளுக்கு ரூ 2.87  லட்சம் மதிப்பில்  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன்,முன்னாள் துணை மேயர் கே.சி. பழனிச்சாமி, சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சூரம்பட்டி ஜெகதீஷ், பகுதி செயலாளர் கேசவமூர்த்தி, முருகசேகர், தங்கமுத்து, கோவிந்தராஜ், ஜெயராஜ், ராமசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்கள் வீரக்குமார்,பாவை அருணாசலம், மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார்,ஆவின் துணைத்தலைவர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top