logo
கா்நாடக மதுபாட்டில்கள் கடத்தலில் ஈடுபட்ட  அதிமுக பிரமுகரின் லாரி பறிமுதல்

கா்நாடக மதுபாட்டில்கள் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரின் லாரி பறிமுதல்

05/Jul/2021 12:48:53

 ஈரோடு, ஜூலை: காய்கறி லோடுடன் கர்நாடக மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக அதிமுக பிரமுகருக்கு சொந்தமான லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் உத்தரவின் பேரில் காவிரி சோதனை சாவடியில் நேற்று போலீசார் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ராயப்பேட்டை பகுதியில் இருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, காய்கறி மூட்டைகளுக்கு அடியில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் 52 பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், பிடிபட்ட நபர் ஈரோடு  அதிமுக பிரமுகர் முன்னாள் மண்டல தலைவர் காஞ்சனா பழனிச்சாமிக்கு சொந்தமான வாகனம் என்பதும், லாரியின் டிரைவர் ஈரோடு சீனிவாச வீதியை சேர்ந்த சண்முகம் மகன் வெங்கடேஷ் (26) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்த போலீசார் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Top