logo
ஈரோடு மாநராட்சி  வ .உ. சி.பூங்காவில்   திங்கட்கிழமை முதல்  மீண்டும் காய்கறி  சந்தை: மாநகராட்சி ஆணையர்  இளங்கோவன் தகவல்

ஈரோடு மாநராட்சி வ .உ. சி.பூங்காவில் திங்கட்கிழமை முதல் மீண்டும் காய்கறி சந்தை: மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தகவல்

03/Jul/2021 06:35:18

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாநராட்சி  வ .உ. சி.பூங்காவில்   திங்கட்கிழமை முதல்  மீண்டும் காய்கறி  சந்தை செயல்படும் என மாநகராட்சி ஆணையர்  இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோடு ஆர்.கே.வி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக தற்காலிகமாக ஈரோடு வ. உ. சி பூங்கா பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் செயல்பட தொடங்கியது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகளும், 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகிறது.

இரவு முழுவதும் மொத்த வியாபாரமும், காலையில் சில்லரை வியாபாரமும் நடைபெற்று வந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவதால் வ.உ.சி காய்கறி மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும். 

இந்நிலையில்  மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக  கடந்த மே மாதம் 10-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து வ.உ.சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது.

பின்னர் ஈரோடு பஸ் நிலையத் திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு மொத்த வியாபாரம் மற்றும் நடைபெற்று வருகிறது. பொது மக்களுக்கு குடியிருப்புக்கு நேரடியாக நடமாடும் வாகனங்கள் மூலமும் தள்ளுவண்டி மூலமும் காய்கறிகள் விற்பனை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் தற்போது தொற்று தாக்கம் குறைந்து வருவதால் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வரும் திங்கள் முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதில் முக்கியமானவை திங்கட்கிழமை முதல் பஸ் சேவை மீண்டும் தொடங்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பஸ் நிலையத்தில் செயல்பட்டு காய்கறி மார்க்கெட் வரும் திங்கள்கிழமை முதல் மீண்டும் பழையபடி வ.உ.சி. பூங்கா பகுதியில் செயல்பட ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக  ஈரோடு மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் கூறியதாவது: வரும் திங்கட் கிழமை முதல் பஸ் சேவை மீண்டும் தொடங்க உள்ளதால் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் மீண்டும் வ. உ. சி. பூங்கா பகுதிக்கு  மாற்றப்படுகிறது. 

இங்கு  வழக்கம் போல் மொத்த வியாபாரமும், சில்லரை வியாபாரமும் நடைபெறும்.மாநகராட்சி சார்பில் பணி யாளர்கள் அங்கு சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிருமி நாசினி தெளிக்கப் பட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை  வியாபாரிகளும், காய்கறி வாங்க வரும் பொது மக்களும் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.


Top