logo
கோபி தொகுதியில் ரூ.38.17 கோடியில் 384 அடுக்குமாடி குடியிருப்பு: பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்.

கோபி தொகுதியில் ரூ.38.17 கோடியில் 384 அடுக்குமாடி குடியிருப்பு: பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்.

02/Feb/2021 03:22:26

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட  தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.38.17 கோடி மதிப்பீட்டில், 384 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பணிகளை தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,  மூத்த அமைச்சர் என்ற முறையில் சசிகலா வருகை குறித்த  கேள்விக்கு  கரங்களை கும்பிட்டு பதிலளிப்பதைத் தவிர்த்தார்.இதையடுத்து அவர் மேலும் கூறியதாவது:

 பள்ளி திறப்பது குறித்து முதல்வர் தான் அறிவிப்பார். 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்களுடன் கருத்து கேட்டபின் அறிவிக்கப்படும். நீட்த்தேர்வில் 28 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் ஆனால் தற்போது 5 ஆயிரம் பேர் தான் பயிற்சி பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்த கேள்விக்கு மருத்துவர்கள் தூய்மை பணியாளர்கள்,காவலர்கள் போன்றவர்களுக்கு தற்போது முன்னுரிமை வழங்கப்படும்.  அதற்கு பிறகு மத்திய அரசு கூறுகிற வழிகாட்டுதலின் படி தடுப்பூசி போடப்படும்.பள்ளிகளில் வகுப்பறைகளுக்கு தினமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுவதாகவும் அப்படி சுத்தம் செய்யாத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

Top