logo
சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டியில்  மரக் கடையில் ரூ. 95 ஆயிரம் பணத்தை திருடிய நபர் கைது

சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டியில் மரக் கடையில் ரூ. 95 ஆயிரம் பணத்தை திருடிய நபர் கைது

03/Jul/2021 05:44:31

ஈரோடு, ஜூலை: சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டியில்  மரக் கடையில் ரூ. 95 ஆயிரம் பணத்தை திருடிய நபரை போலீஸார்  கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி கடந்த 28-ஆம் தேதி கோவை சாலையில் உள்ள மர கடையின் உள்ளே புகுந்து கல்லாவில் உள்ள பணம் 95 ஆயிரத்தை ர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும்  காட்சி சிசிடிவியில் பதிவானதை  வைத்து புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

 இந்த நிலையில், சனிக்கிழமை  அந்த மர்ம நபரை புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினர் கைது செய்து மேற்கொண்ட  விசாரணையில் பணத்தை திருடிய நபர் கோவை மாவட்டம், அன்னூர் உப்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பதும் இவர் பல திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. இவரை கைது செய்த புஞ்சைபுளியம்பட்டி காவல் துறை யினர் குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Top