logo
வேளாண் சட்டமசோதாவைக் கண்டித்து ஈரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்ட இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் 37 பேர் கைது

வேளாண் சட்டமசோதாவைக் கண்டித்து ஈரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்ட இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் 37 பேர் கைது

12/Oct/2020 03:54:35

ஈரோடு: மத்திய அரசு அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பதை, கண்டித்தும் .மின்சாரத் திருத்தச் சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை போன்ற மக்கள் விரோத சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று(12.10.2020) ஈரோடு  பேருந்து நிலையம் அருகே சத்தியமங்கலம் சாலையில்   இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் த. ஸ்டாலின் குணசேகரன்  தலைமையில் நடைபெற்றது.  வேளாண் மசோதா சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், ரயில்வே தனியார்மயம் ஆவதைக் கண்டித்தும்  இதில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

 போராட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜன், மாவட்டப் பொருளாளர் எஸ்.டி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர்  மகாலிங்கம், வட்டாரச் செயலாளர் .சோமசுந்தரம் உட்பட 37 பேர் சாலையில் அமர்ந்து மறியலில்  ஈடுபட்டனர்.  இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்து வேன் மூலமாக  அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதேபோல,பெருந்துறை. சென்னிமலை மொடக்குறிச்சி, சிவகிரி, பவானி, கோபி, சத்தியமங்கலம்  ஆகிய பகுதிகளிலும்  மறியல் போராட்டம் நடைபெற்றது.                                        

Top