logo
 இளைஞர் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் ஜூலை 15-இல்  மாணவ,,மாணவிகளுக்கு போட்டிகள்

இளைஞர் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் ஜூலை 15-இல் மாணவ,,மாணவிகளுக்கு போட்டிகள்

30/Jun/2021 10:44:16

ஈரோடு,ஜூன்: இளைஞர் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட மாவட்ட காவல்துறை  சார்பில் வரும் ஜூலை 15-ஆம் தேதி  மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் நடத்தப்படுகிறது.

இளைஞர் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிளின் திறனை வெளிக்கொணரும் நோக்கில்  பின்வரும் தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதன்படி 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியம் போட்டிகள்.

10-ஆம்  வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்த கட்டுரை (700 வார்த்தைகளுக்கு மிகாமல் ) இருக்க வேண்டும்கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த குறும்படம் (அதிகபட்சம் 3 நிமிடங்கள் வரை) போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் உள்ள erode district police events   பக்கத்தில் இந்த காலை 10 மணி முதல் வரும் 13-ஆம் தேதி காலை 10 மணிக்குள் பதிவிட வேண்டும்.

ஒவ்வொரு தலைப்புகளில் இருந்தும் சிறந்த முதல் மூன்று மாணவ ,மாணவிகளுக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை   சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று  ஈரோடு மாவட்ட காவல்  அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Top