27/Jun/2021 09:37:41
ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே மர்ம நபர் கொடுத்த கொரோனா மாத்திரை சாப்பிட்டு 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாக இருப்பதாக சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பணன்
கவுண்டர். இவரது மனைவி மல்லிகா மகள்
தீபா. இவர்களது தோட்டவீடு பணியாளர் குப்பம்மாள்.
இந்நிலையில் நேற்று கொரோனா சிகிச்சை முகாமிலிருந்து
வருவதாக கூறி மர்ம நபர் வழங்கிய மாத்திரையை சாப்பிட்டதில் மல்லிகா
சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள மூன்று பேரில் கருப்பண்ண கவுண்டர் மற்றும் மகள்
தீபா கோவை தனியார் மருத்துவமனையிலும் தோட்ட பணியாள் குப்பம்மாள்
மேல்சிகிச்சைக்காக சேலம்
அரசு மருத்துவமனையிலும்
அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் கல்யாணசுந்தரம் மற்றும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போத்திஸ்குமார் ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பண்ண கவுண்டரிமிடருந்து வாங்கிய7 லட்சம் ரூபாய் கடனிற்கு அதிக வட்டி கேட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த கல்யாண சுந்தரம் அருகில் உள்ள பகுதியில் வசிக்கும் போத்தீஸ்குமாரிடம் விஷ மாத்திரை கொடுத்து அனுப்பி கொலை செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்த குப்பம்மாள் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைதொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகள் தீபாவும் உயிரிழந்தார். தற்போது அதே கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கருப்பண்ண கவுண்டருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.