logo
ஆலங்குடியில் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து டிஎஸ்பி ஆய்வு

ஆலங்குடியில் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து டிஎஸ்பி ஆய்வு

03/May/2020 07:49:07

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில்,வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இடங்களில் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

ஆலங்குடி பகுதியில் வெளிமாநிலத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்துள்ள அவர்கள். உணவின்றி தவித்து வந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு பொருட்களை வழங்கி வந்தனர். இந்நிலையில்,வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பினால் அனுப்ப ஏற்பாடு செய்வதாக அரசு அறிவித்தது. இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிக்கு சென்ற ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜா தலைமையிலான போலீசார் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களின் பட்டியல்களை சேகரித்தனர்.

Top