logo
ஈரோடு சந்தையில் மாடுகள் வரத்து இல்லாததால் வியாபாரிகள் ஏமாற்றம்

ஈரோடு சந்தையில் மாடுகள் வரத்து இல்லாததால் வியாபாரிகள் ஏமாற்றம்

02/Oct/2020 12:03:31

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையானது வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கமாகும். புதன்கிழமை வளர்ப்பு கன்று சந்தையும் வியாழக்கிழமை கறவை மாட்டு சந்தையும் நடைபெற்று வந்தது. இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

இதே போல விற்பனைக்கு வரும் மாடுகளை வாங்குவதற்காக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, கோவா,தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம்  உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து மாட்டுச் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கடந்த வாரம் மாட்டு சந்தை கூடியது. ஆனால் மாவட்ட நிர்வாகம் அனுமதி இல்லாமல் நடத்தியதால் பாதியிலேயே சந்தை மூடப்பட்டது.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் சந்தைகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியதையத்து இன்று கருங்கல்பாளையம் மாட்டுசந்தை தொடங்கியது. மாட்டுச்சந்தை நுழைவாயிலில் கிருமி நாசினி வைக்கப்பட்டு இருந்தது. மாஸ்க் அணிந்து வரும் வியாபாரிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப் பட்டனர். வியாபாரிகளின் உடல் வெப்பநிலையை வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

 ஆனால், மாடுகள் வரத்து அடியோடு நின்று போனதால் மாடுகளை வாங்குவதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அடுத்தவாரம் நிலைமை சரியாகும் என்று எதிர்பார்ப்பதாக மாட்டு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

Top