13/Jun/2021 11:26:25
சென்னை, ஜூன்: தமிழகத்தில் புதுக்கோட்டை, ஈரோடு, கரூர் உள்பட 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்து அரசு உத்தரவு.
சென்னை ஆட்சியராக ஜெயராணி, திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ், விழுப்புரம் ஆட்சியராக மோகன். புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு, தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ், நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ்,
கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஸ்ரீதர், விருதுநகர் ஆட்சியராக மேகநாத் ரெட்டி, தேனி ஆட்சியராக முரளிதரன், செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத், தேனி ஆட்சியராக முரளிதரன், வேலூர் ஆட்சியராக குமரவேல் பாண்டியன், திருவண்ணாமலை ஆட்சியராக முருகேஷ், திருப்பத்தூர் ஆட்சியராக அமர் குஷவா.
நாமக்கல் ஆட்சியராக ஷ்ரேயா சிங், திண்டுக்கல் ஆட்சியராக விசாகன், கோவை
ஆட்சியராக சமீரான், திருப்பூர் ஆட்சியராக வினீத்,
அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி, கரூர்
ஆட்சியராக பிரபு சங்கர், தென்காசி ஆட்சியராக
சந்திரலேகா,
ஈரோடு ஆட்சியராக கிருஷ்ன உண்ணி, திருவாரூர் ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன்
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.