09/Jun/2021 10:43:52
தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,92,025ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 2,319, ஈரோட்டில் 1,405, சென்னையில் 1,345 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 405 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 28,170 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 31,253 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம்
20,59,597 பேர் நோய்த்தொற்றிலிருந்து
குணமடைந்துள்ளனர். தற்போது
மருத்துவமனையில் 2,04,258 பேர் சிகிச்சை பெற்று
வருகின்றனர். புதன்கிழமை ஒரே நாளில் 1,70,332 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு நாள் பாதிப்பு 185 பேர். 321 பேர்
குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டம் முழுவதும் மருத்துவமனை வீடுகள் என மொத்தம் 2535 பேர் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.