logo
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 265-ஆவது பிறந்த நாள்: அரசு சார்பில் உருவச்சிலைக்கு மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 265-ஆவது பிறந்த நாள்: அரசு சார்பில் உருவச்சிலைக்கு மரியாதை

17/Apr/2021 01:54:16

புதுக்கோட்டை, ஏப்: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 265-ஆவது பிறந்த நாளையொட்டி ஓடாநிலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் சி கதிரவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 265-ஆவது பிறந்த நாள் விழா ஆண்டு தோறும் ஏப்ரல்.17-இல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக  அவர் வாழ்ந்த ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அடுத்துள்ள ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் மாலை அணிவித் து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து மணிமண்டபத்தில் நுழைவாயி லில் உள்ள தீரன் சின்னமலையின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கூறுகையில், கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக அரசியல் கட்சியினர் பொதுமக்கள் மற்றும் சமுதாய இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கப்பட் டுள்ளது. எனவே அரசின் சார்பில் மட்டும் மாலை அணிவிக்கப்பட்டது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ்குமார். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஸ், மொடக்குறிச்சி தாசில்தார் சங்கர்கணேஷ், அரச்சலூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top