logo
தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 21-இல் ஆளுநர் உரையுடன் கூடுகிறது

தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 21-இல் ஆளுநர் உரையுடன் கூடுகிறது

09/Jun/2021 10:27:22

சென்னை, ஜூன்: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 21-ஆம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு புதன்கிழமை அறிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூன் 21-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. அதன் பின் சட்டப்பேரவை அலுவல் கூட்டம் நடைபெறும். சட்டமன்றம் எத்தனை நாட்கள் நடைபெறும், என்னென்ன பணிகள் என்பதை அதில் முடிவு எடுப்போம். ஜனநாயக முறையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்.

சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற உள்ளது. முன்னதாக பேரவைக்கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். 

மேலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமவாய்ப்பு அளித்து பேரவைக் கூட்டத்தை நடத்த முதல்வர் மு..ஸ்டாலின் விரும்புவதாகத் தெரிவித்த  அவர் கூட்டத்தொடரை நேரலை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்

Top