logo
புதுக்கோட்டை  விவசாயிகளின்  வேளாண் பணிகளுக்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை திறப்பு: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை விவசாயிகளின் வேளாண் பணிகளுக்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை திறப்பு: ஆட்சியர் தகவல்

26/May/2021 08:28:26

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் சார்ந்த பணிகளுக்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:   தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுத்திட முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் விவசாய பணிகள் தொய்வில்லாமல் நடைபெறும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தற்பொழுது பொது மக்களுக்கு விவசாயிகளிடமிருந்து விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியன நேரடியாக நுகர்வோருக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு, பல்வேறு துறைகள் மூலம் 255 நடமாடும் அங்காடிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள், விளைபொருட்கள் ஆகியவற்றினை எடுத்துச்செல்லவும் அதில் ஏற்படும் சந்தேகங்கள், வழிதடங்களில் தேவைப்படும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றினை ஒருங்கிணைத்திடவும், விவசாயிகளின் சாகுபடி பணிகளில் ஏற்படும் சந்தேகங்கள், உபரியான விளைபொருட்களை சந்தைபடுத்துதலில் உள்ள இடர்பாடுகள் ஆகியவை குறித்த தகவல்களை வழங்கிட மாவட்ட நிவாகத்தின் மூலம்  ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகத்துறை மற்றும் காவல்துறை அலுவலா;கள் ஓரிடத்தில் இருந்து தகவல் பரிமாற்றத்திற்கு உதவி செய்திட காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களி டமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு பதில் அளித்திட உத்தரவிடப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையினை 04322 - 221666 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Top