08/Jun/2021 05:48:49
சென்னை, ஜூன்: தமிழகம் முழுவதும் உள்ள 52 வருவாய் கோட்டாட்சியர்கள்(RDO) பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் புதுக்கோட்டைக்கு பி. அபிநயா வருவாய் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கெனவே நாகபட்டினத்தில் துணை ஆட்சியர்(பயிற்சி)-ஆக பணியாற்றி வந்த வி.தி.எஸ்.எல்.பி. அபிநயா தற்போது புதுக்கோட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதுக்கோட்டையில் வருவாய் கோட்டாட்சியராகப் பணியாற்றிய டெய்சி குமார் கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதே போல ஈரோடு வருவாய் கோட்டாட்சியராக இருந்த சி. சைபுதீன் கரூர் மாவட்ட தனித்துணை (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்ட துணைஆட்சியர்(பயிற்சி) -ஆக பணியாற்றிய பெ. பிரேமலதா ஈரோடு வருவாய் கோட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் மொத்தம் 52 வருவாய் கோட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.