logo
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் திருமயம் வட்டார மருத்துவமனைகளுக்கு  உபகரணங்கள் அளிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் திருமயம் வட்டார மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் அளிப்பு

04/Jun/2021 06:31:33

புதுக்கோட்டை, ஜூன்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில்  அளிக்கப்பட்ட அவசரகால மருத்துவ உபகரணங்களை திருமயம் வட்டார மருத்துவமனைகளுக்கு  தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி  வழங்கினார்.

 சுவாச மருந்து புகை கருவி- நெபுலைசர் ஆக்ஸிஜன் செலுத்தும் அளவீட்டு உபகரணங்கள் -ஆக்கிஜன்ப்ளோமீட்டர்ஆக்சிஜன் நகர்வு உருலை தாங்கி, நோயாளிகளுக்கான சிறப்பு சக்கர நாற்காலிகள், இரத்த அழுத்த அளவீட்டு உபகரணம், இதயத்துடிப்பு அளவீட்டு கருவிகள், மருத்துவர்களுக்கான சிறப்பு கையுறைகள்தலையணையுடன் கூடிய படுக்கை விரிப்புகள், பெடஸ்டல் மின்விசிறிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

 மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையில்  மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் , மாநில சட்ட ஆலோசகர் ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற  நிகழ்வில், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதில், மாவட்ட பொருளாளர் செந்தில் குமார்  , மாவட்ட அமைப்புச் செயலாளர்முத்துக் குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் குமார், மாவட்ட செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லாதிருமயம் ஒன்றிய பொறுப்பாளர்கள் உமா ஜெயந்தி , முத்துலெட்சுமி,சரவணன் உள்பட  மாநில,மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும்  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் நாயகம்  வரவேற்றார். நிறைவாக  திருமயம் வட்டார மகளிரணி தலைவி வசந்த மலர் நன்றி கூறினார்

Top