logo
கொரோனா தடுப்பூசி இல்லை: பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கொரோனா தடுப்பூசி இல்லை: பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

03/Jun/2021 08:20:15

ஈரோடு ஜுன்: கொரோனா தடுப்பூசி இல்லை எனக்கூறி பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

தமிழகத்தில் கொரோனா 2-ஆம் அலையின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசு மற்றும் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவ மனைகளில் கோவிட்ஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் அதன் ஒருபகுதியாக ஈரோடு மாநராட்சிக்குட்பட்ட மரப்பாலம் அருகேயுள்ள சி.எஸ். துவக்கப்பள்ளியில் கொரோனா தடுபபூசி கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள்  அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த  காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கூடிய விரைவில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Top