logo
கருப்புச்சட்டை அணிந்து தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

கருப்புச்சட்டை அணிந்து தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

29/Sep/2020 03:44:30

by c.raaj-ஈரோடு:  தேவேந்திர குல வேளாளர்களின் நெடுநாள் கோரிக்கையான பள்ளன், பன்னாடி, தேவேந்திரகுலத்தான்,காலாடி, குடும்பன், கடையன், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற  அரசாணையை தமிழக அரசு  வெளியிட வேண்டும் என வலியுறுத்தி கருப்புச்சட்டை அணிந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் (29.9.2020) இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

   தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னிமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் தலைமை வகித்தார் ஒன்றிய பொறுப்பாளர் பி.ரெங்கசாமி மாவட்ட செயலாளர் மயில் துறையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் கே.குணா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் குமார் மாவட்ட மகளிரணி செயலாளர் சத்யா, இளைஞரணி செயலர் குமரேஷ் உள்படநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Top