logo
மாணவர்களின் மீதான வன்முறைகளுக்கு பின்னால் பாஜக:மாணவர் சங்கத் தலைவர் தீப்சிதா பேட்டி

மாணவர்களின் மீதான வன்முறைகளுக்கு பின்னால் பாஜக:மாணவர் சங்கத் தலைவர் தீப்சிதா பேட்டி

08/Mar/2020 09:57:42


புதுதில்லியில் மாணவர்களின் மீதான வன்முறைகளுக்குப் பின்னால் பாஜாகவும் அதன் மாணவர் அமைப்பான ஏவிவிபியும் உள்ளது  என குற்றம் சாட்டினார் இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் தீப்சிதா.

  புதுக்கோட்டையில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநில மாணவிகள் மாநாட்டில் பங்கேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குறிப்பாக உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. வன்முறையாளர்களுக்கு பின்னால் ஆளும் கட்சி துணை நிற்கிறது. இதனால் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

  மேலும், பெண்களுக்கு கல்வியில் முன்னுரிமை என்பது அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு என்று தனியாக கல்லூரிகள், விடுதிகள் ஆகியவை இருந்தாலும் அவைகள் பாதுகாப்பற்றதாகவே உள்ளன. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடந்த வன்முறைகளில் காவல்துறை அத்துமீறி மாணவர்கள் மீது  தாக்குதல் நடத்தி உள்ளது. ஆனால் இந்த வன்முறைத் தாக்குதல் தொடர்பாக காவல்துறை இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த வன்முறைகளுக்கு பின்னால் பா...வும், அவர்களது .பி.வி.பி அமைப்பும் தான் உள்ளது. அடிப்படைக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பெண்களுக்கு அடிப்படை கல்வி தரப்பட வேண்டும்.  ஆனால் ஆண்டிற்கு ஆண்டு கல்விக்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் தொகை குறைவாகவே உள்ளது என்றார் அவர்.

Top