28/Sep/2020 03:06:59
தமிழ்நாடு கால் நடை பராமரிப்பு துறை மற்றும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய உலக வெறி நாய் தடுப்பு தின விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கால் நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் டாக்டர் க.ஆறுமுகம் முன்னிலையில் நடைபெற்ற முகாமில் சுமார் 200 க்கு மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு வெறி நாய் தடுப்பு ஊசி இலவசமாக போடப்பட்டது. முன்னதாக புதுக்கோட்டை நகரம் முழுவதும் ஒலி பெருக்கி மூலம் முகாம் தொடர்பாக அறிவிப்பு செய்யப்பட்டது.இதில், ரோட்டரி மாவட்டம்(3000) முன்னாள் ஆளுநர்கள் கண.மோகன்ராஜ், பார்த்திபன், சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் ப செல்லத்துரை, உறுப்பினர்கள் அப்பு செந்தில், செல்வம் மற்றும் கால்நடைத்துறை உதவி இயக்குனர் அருள்செல்வி,சாகுல்ஹமீது, அரசு மருத்துவர்கள் தெட்சிணாமூர்த்தி, தினேஷ்குமார், பாண்டியராஜன்,பிரபு மற்றும் ஆய்வாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியில், அரசு வழிகாட்டலுதலை பின்பற்றி அனைவரும் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.