15/Mar/2021 05:29:30
ஈரோடு மார்ச்: ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதிக்கு அதிமுக தலைமையால் ஜே.கே. என்கிற ஜெயக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்த பின்பு மதியம் ஒரு மணிக்கு மேல் வேட்பாளர் ஜெயக்குமார் பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்இலாஹிஜானிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் வேட்பாளர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பி எஸ் ஆகியோர் அதிமுக கோட்டையாக விளங்கும் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் என்னை வேட்பாளராக தேர்வு செய்தமைக்கு நன்றி.
கட்சி நிர்வாகிகளின் முழு ஒத்துழைப்போடு பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றியை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரிடம் சமர்ப்பிப்பேன். மேலும் மக்களோடு மக்களாக எளிய தொண்டனாக இருந்து மக்களுக்காக பாடுபடுவேன். முதல்வர். அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளே ஓட்டுகளாக மாறி நூறு சதவீத வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.