28/Sep/2020 11:50:17
விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும், திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், இதற்கு துணைபோன ஆளும் அதிமுக அரசை கண்டித்தும் பொன்னமராவதியில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ரகுபதி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ,மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.