logo
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்- திமுக  வேட்பாளர் முத்துசாமி உறுதி

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்- திமுக வேட்பாளர் முத்துசாமி உறுதி

20/Mar/2021 10:53:27

ஈரோடு மார்ச்:திமுக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என்றார் ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சு.முத்துசாமி.

 ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட முதலாம் மண்டலப்பகுதிகளான சூரியம்பாளையம், ஜவுளி நகர், மாதேஸ்வரன் நகர் போன்ற பகுதிகளில் நேற்று வீடு, வீடாக சென்று  பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து திமுக வேட்பாளர் சு.முத்துசாமி பேசியதாவது:

கடந்த, பத்து ஆண்டாக பொருளாதார ரீதியாக தமிழகம் மிகவும் பின்நோக்கி சென்றுவிட்டது. புதிதாக தொழிற்சாலைகள் ஏதும் துவங்கப்படவில்லை. மத்திய, மாநில அரசுகளின் தவறான திட்டங்களால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.


 தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும், ஜூன் 3-இல் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.4,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியளித்தார்.

தவிர, தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல, அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். சூரியம்பாளையம் பகுதி, ஆரம்பத்தில், பேரூராட்சியாக இருந்தது. பின், ஈரோடு மாநகராட்சி பகுதியுடன் இணைக்கப் பட்டது. அங்கு அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாகவே செய்யப்பட்டுள்ளது. மாணவர் களின் வசதிக்கான நுாலகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை அமைக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேடான பகுதிகளில் குடிநீர் குறைந்த அளவு வினியோகிக்கப்படுவதாக பெண்கள் தெரிவித் தனர். இதற்கு தீர்வு காணும் வகையில் புதிதாக மேல்நிலை தொட்டி  அமைத்து  தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் அனைத்து அடிப்படை தேவைக ளையும் நிறைவேற்ற பாடுபடுவேன். எனவே, உதய சூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களி த்து, வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

Top