logo
பக்தர்களின்றி பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களின் நடந்த கம்பங்கள் காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி

பக்தர்களின்றி பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களின் நடந்த கம்பங்கள் காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி

12/Apr/2021 11:11:34

ஈரோடு, ஏப்: ஈரோடு மாநகரின் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களாக பெரிய மாரியம்மன், கரை வாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில்களில் பக்தர்களின்றிகம்பங்கள் காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு மாநகரின் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களாக பெரிய மாரியம்மன், கரை வாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோயில்களின் குண்டம், தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

ஆனால் இந்த ஆண்டு கடந்த 6-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. 7 -ஆம்  தேதி இரவு பெரிய மாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்பட்டன. அதைத் தொடர்ந்து பக்தர்கள் தினமும் கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வந்தனர். கடந்த 8-ஆம் தேதி காலை காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும் சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் எளிமையான முறையில் நடந்தது.

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால்  நிகழாண்டுக்கான திருவிழாவை நடத்த தமிழக அரசு தடை விதித்திருந்தது.இதனால் கம்பங்களுக்கு புனிதநீர் ஓட்ட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அம்மனை மட்டும் பக்தர்கள் வழிபட்டு செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. 

 ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந் தது. ஈரோடு மாநகரின் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களாக பெரிய மாரியம்மன், கரை வாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில்களில்  பெரிய  மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் நடப்பட்டுள்ள கம்பங்கள் மதியம் 3 மணி அளவில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டு கம்பங்களை பூசாரிகள் தோளில் சுமந்து முக்கிய வீதி வழியாக வந்து மணிக்கூண்டு பகுதியில் மூன்று கம்பங்களும்  சேர்ந்து மாநகரின் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காரைக்காலில் விடப்பட்டது. 

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஊர்வலங்கள் எடுத்துச் செல்லும் போது சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு வந்து மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக கம்பங்கள் எடுக்கும் நிகழ்ச்சியில் பூசாரிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படிதிங்கள்கிழமை அதிகாலை 5 மணி அளவில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் இருந்து கம்பங்கள் தனித்தனியாக எடுக்கப்பட்டு மினிடோர் ஆட்டோ மூலம் ஏற்றி மணிக்கூண்டு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. 

அங்கிருந்து ஒரு லாரியில் மூன்று கம்பங்களும்  ஒன்றாக ஏற்றப்பட்டு ஆர் கே வி ரோடு, காவேரி ரோடு வழியாக கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் விடப்பட்டது. இந்த நிகழ்வில் 3 கோயில்களில் பூசாரிகள், செயல் அலுவலர் ரமணி காந்தன், தாசில்தார் பாலசுப்ரமணியம் ஆகியோர்  பங்கேற்றனர். டவுன் டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை மறு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 


                                                   

        


Top