logo
 புதுக்கோட்டை உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-ல வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுக்கோட்டை உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-ல வானிலை ஆய்வு மையம் தகவல்

27/Sep/2020 06:36:26

புதுக்கோட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தென்காசி, தஞ்சாவூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தர்மபுரி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை, திருவாரூர், சிவகங்கை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்,  மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம்.  எஞ்சிய கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Top