08/Mar/2021 05:50:05
மகளிர் தினத்தையொட்டி பெண் தபால்காரர்களை கௌரவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட விழாவிற்கு மரம் நண்பர்கள் நிர்வாகி பேராசிரியர்.சா.விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
தலைமை தபால் அலுவலர் எஸ்.சத்தியமூர்த்தி ம் வரவேற்றார் மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜி.எட்வின் பங்கேற்று பெண் தபால்காரர்கள் எஸ்.லட்சுமி, கே.எஸ்.அன்னலட்சுமி, ஆர்.கவிதா, கே.ராதிகா, டி.கலைச்செல்வி, ஆர்.ரம்யா, எஸ்.கோமதி, ஆர்.சுமதி உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்திப்பேசுகையில், புயல், மழை, வெய்யில், சுனாமி, கொரோனா என்று எதையும் பாராமல் வீடுதோறும் சென்று தபால் பட்டுவாடா செய்யும் பணியாற்றும் பெண் தபால்காரர்களின் சேவை சிறப்பானது. எப்போது தபால்காரர் வருவார் என்று பலரும் இன்னும் காத்திருப்பது வழக்கம் உள்ள நிலையில், அதை நிறைவேற்றக்கூடிய இந்தப் பணி பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்று குறிப்பிட்டார்.
நிகழ்வில், பழனியப்பா மெஸ் கண்ணன், பாரதவிலாஸ் கிருஷ்ணமூர்த்தி, மொபைல் ராசு, பொறியாளர் ரியாஷ்கான் மற்றும் அப்துல்லா, தலைமை தபால்அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். தபால்காரர் நாகராஜன் நன்றி கூறினார் ,