logo
நிவர் புயல்: புதுக்கோட்டையில் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

நிவர் புயல்: புதுக்கோட்டையில் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

24/Nov/2020 07:18:30

புதுக்கோட்டை:  நிவர் புயல் அச்சுறுத்தல் காரணமாக புதுக்கோட்டையில் அரசு பேருந்துகள்  அரசு உத்தரவின்படி செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நிறுத்தப்பட்டன. ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் ஊருக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட நேரிட்டது.

நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணி முதல் புதுக்கோட்டை தஞ்சாவூர் நாகப்பட்டினம் உட்பட 7 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என தமிழக முதல்வர்  எடப்பாடி கே. பழனிச்சாமி  அறிவித்தார். இதனை தொடர்ந்து  செவ்வாய்க்கிழமை பிற்பகல்  1 மணியுடன் புதுக்கோட்டையில் அரசு பேருந்து போக்குவரத்து முழுமையாக  நிறுத்தப்பட்டது .

 அரசு பேருந்துகள் அனைத்தும் பணிமனையில் கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகள் இயக்கப்படவில்லை. போதிய தகவல் தெரியாமல் பயணித்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்ல பேருந்துகள் இல்லாமல் அவதிப்பட நேரிட்டது. 


Top